பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007, என்பது பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு பராமரிப்பு மற்றும் நலனை பேண அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்டவாறு, சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு விதிகளும் 31.12.2009 அன்று உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள்/சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து மூத்த குடிமக்கள், பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெற, ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர்கள், பராமரிப்பு அலுவலர்களாகவும், சமரச அலுவலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
ஒரு மூத்த குடிமகன் அல்லது பெற்றோர் தனது சொந்த வருவாயிலோ அல்லது அவருக்குச் சொந்தமான சொத்திலிருந்தோ தன்னைப் பராமரிக்க முடியாத நிலையில், சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் தனது குழந்தைகள்/சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு.
-
மாதாந்திர வாழ்க்கைப்படி வேண்டி, இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் 90 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.
-
குழந்தைகள் அல்லது உறவினர்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால், தீர்ப்பாயம் அபராதம் விதிக்கலாம் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் செலவினங்களுக்காக ஒவ்வொரு மாத உதவித் தொகையின் முழு அல்லது எந்தப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள உத்தரவிடலாம் அல்லது ஒரு மாத வரையிலோ அல்லது பணம் செலுத்தப்படும் வரையிலோ நீட்டிக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கலாம்.
-
அதிகபட்ச பராமரிப்பு வாழ்க்கைப்படி மாதம் ரூ. 1000/- விட அதிகமான நிர்ணயிக்ககூடாது.
-
தீர்ப்பாயம், விசாரணை நிலுவையில் இருக்கும் போது, முதியோருக்கு இடைக்கால பராமரிப்புக்காக மாதாந்திர உதவித்தொகையை வழங்க, குழந்தைகள் அல்லது உறவினர்களுக்கு உத்தரவிடலாம்.
-
மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பான நபர்கள் மூத்த குடிமக்களை கைவிட்டால், அத்தகைய நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தரநிலைகள் / அத்தியாவசிய தரங்களை நிர்ணயித்தல்
தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது அரசாணை எண்.16, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (SW6(1)) துறை, நாள். 09.02.2016 ன் படி, அரசு சாரா நிறுவனத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச தரநிலைகள் நிர்ணயித்தும், அரசாணை எண். 83, சமூக நலம் மற்றும் சத்துணவுத் உணவு திட்டம் (SW6(1)) துறை நாள். 23.11.2016 இன் படி குறைந்தபட்ச தரநிலைகள் மேம்படுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளன.
முதியோர் உதவி எண்.14567
இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண்.14657 ஒன்றிய அரசின் 100% நிதியுதவிடன் 28.04.2021 அன்று துவங்கப்பட்டு அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மீட்பு உதவி, முதியோர் இல்லங்கள், முதியோர் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிக்காட்டுதல் போன்ற சேவைகளை வழங்குவதற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.






